![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsGJFebF9kG6n3zq7FXS1NziZ9Wsc_EeOWke7U6m_yTjaINzngbjTjASHmF_ZSwtmKWxej0FU6w_Ah3YmT6Tni5iCsT1n_dF66Dhw5e9Twy4zmdhwjmxuChjb0lfKZat8ZxHTZA_imZQ8L/s200/sami.gif)
அன்பு கலந்த காமிக்ஸ் நெஞ்சங்களுக்கு காமிக்ஸ் காதலனின் வணக்கங்கள். இன்று மே தினம். வழமையாக சிறப்பு தினங்களில் பதிவிடும் நமது காமிக்ஸ் ரசிகர்கள் இன்று ஏனோ வரவில்லை. அதனால் ஏதோ என்னால் முடிந்த அளவிற்கு ஒரு சிறிய பதிவுடன் ஆஜராகி உள்ளேன்.
தற்போதுள்ள சூழலில் நம்மால் முன்மாதிரி பதிவிட இயலவில்லை.மாதம் ஒரு பதிவிட முக்கிக்கொண்டு இருக்கையில் எங்கள் அண்ணா, எங்கள் ஆசான், பெரியண்ணா திரு கனவுகளின் காதலர் அவர்கள் கடந்த மாதம் மட்டும் பதினோரு முத்து முத்தான பதிவுகளை இட்டு நம்மையெல்லாம் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி உள்ளார். அவருக்கு ஒரு சல்யூட். அவருடைய ஏப்ரல் பதிவுகளை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
சமீப நிகழ்வுகளில் நம்முடைய கவனத்தினை பெரிதும் கொள்ளையடித்த சாமியாரை பற்றி இன்னமும் ஒலக காமிக்ஸ் ரசிகர் பதிவிடாமல் இருப்பதன் மர்மம் எனக்கு இன்னமும் விளங்கவில்லை. அதனால் நான் பிள்ளையார் சுழி போட்டு சாமியார்களை பற்றிய சிறு பதிவினை ஆரம்பிக்கிறேன். மற்றவர்கள் தொடர்ந்தால் மகிழ்வு. சுவாமி குத்தானந்தா என்ன செய்வாரோ என்றும் பயமாக உள்ளது.
சிறுவயதில் நான் பூந்தளிர் இதழில் படித்த ஒரு சாமியார் கதையை உங்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன். படித்து மகிழுங்கள்.
அடுத்த ஞாயிறு முதல் வழமையான பதிவுகளை எதிர்பாருங்கள்.