Thursday, April 21, 2011

வாண்டுமாமா அவர்களின் பிறந்தநாள் சிறப்பு பதிவு - ஸ்பெஷல் படங்கள்

அன்பு கலந்த காமிக்ஸ் நெஞ்சங்களுக்கு காமிக்ஸ் காதலனின் வணக்கங்கள்.

இன்றுதான் மாமேதை திரு வாண்டுமாமா அவர்களின் பிறந்த நாள் என்று கிங் விஸ்வாவின் இந்த பதிவின் மூலம் அறிந்தவுடன் நாமும் ஏதாவது பதிவிடவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அதன் விளைவே இந்த சிறிய, அவசர பதிவு. வாண்டுமாமா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். திரு வாண்டுமாமா அவர்கள் கல்கி அலுவலகத்தில் 23 ஆண்டுகள் பணியாற்றியது அனைவருக்கும் தெரிந்ததே. அப்படி அவர் பணியாற்றிய காலத்தில் தமிழ் படங்களுக்கு காந்தன் அவர்களும், ஹிந்தி படங்களுக்கு ரா.வீ  அவர்களும் விமர்சனம் எழுதுவார்கள். நடுவில் சில ஆங்கில படங்களுக்கும், தமிழ் படங்களுக்கும் வாண்டுமாமா அவர்களே கௌசிகன் என்ற பெயரில் விமர்சனம் எழுதுவதுண்டு. அப்படி அவர் எழுதிய சில விமர்சனங்கள் இங்கே உங்களின் பார்வைக்கு.

என்னிடம் பழைய கல்கி இதழ்கள் பல உள்ளன. ஆனால் தினமணிக்கதிர் இதழ்கள் சிலவே உள்ளன. ஒரு காலத்தில் தினமணிக்கதிர் இதழில் வாண்டுமாமா அவர்கள் மட்டுமே திரை விமர்சனம் எழுதி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கும் நா.பா அவர்களுக்கும் ஒரு பனிப்போர் துவங்கிய கால கட்டத்தில் நா.பா முதலில் கை வைத்து திரை விமர்சனம் பகுதியில் தான். இந்த சினிமா விமர்சனம் பகுதியை இனிமேல் நீங்கள் செய்ய வேண்டாம் என்று அவர் பிரச்சினையை துவக்கினார். அது சரி, நல்ல நாளில் எதற்கு பழைய விஷயங்கள், விடுங்கள். நான் கூற வந்த மேட்டர் இதுதான் - யாரிடமாவது பழைய தினமணிக்கதிர் புத்தகங்கள் இருந்தால் அவற்றை நான் விலைக்கு வாங்கிக்கொள்ள தயார். என்னுடைய மின் அஞ்சல் முகவரிக்கு தகவல் தெரிவியுங்கள்.

முதலில் நாம் படிக்கப்போகும் விமர்சனம் செல்லக்கிளி என்ற மொக்கைப்படத்தை பற்றியது. இந்த படத்தை நான் பார்த்தது இல்லை. ஆனால் வாண்டுமாமா அவர்களின் விமர்சனம் மூலம் அது எத்தகைய மொக்கை படம் என்பதை விளக்கி விட்டார். கிண்டலும், நக்கலும் மேலோங்கி இருக்கும் அவரது விமர்சனம் இதோ:

கல்கி இதழில் வெளிவந்த திரு வாண்டுமாமா அவர்கள் எழுதிய திரைப்பட விமர்சனம் - செல்லக்கிளி - டோட்டல் டேமேஜ்
Kalki Magazine Vandu mama Film Reviews Tamil Film 1

சில நேரங்களில் ரா.வீழிநாதன் அவர்களுக்கு பதிலாக கௌசிகன் அவர்களே பல ஹிந்தி படங்களை பார்த்துவிட்டு விமர்சனம் எழுதுவார். ரா.வீ எழுதும் ஹிந்தி பட விமர்சனங்களுக்கும் கௌசிகன் அவர்கள் எழுதும் ஹிந்தி பட விமர்சனங்களுக்கு மலையளவு வித்தியாசம் இருக்கும். கௌசிகன் அவர்களுக்கு பெரும்பாலும் மொக்கை படங்களே சிக்கும், நல்ல படங்கள் வரும்போது ரா.வீ அதனை விமர்சனம் செய்வார். இப்படியாக மாறி, மாறி நடந்து கொண்டு இருந்தது. கௌசிகன் அவர்கள் எழுதிய ஒரு ஹிந்தி பட விமர்சனம் இங்கே:

பிடிவாதக்காரன் - ஸித்தி - ஹிந்திப்பட விமர்சனம் - கிண்டலின் உச்சம் - வாண்டுமாமாவின் முத்திரை விமர்சனம்

Kalki Magazine Vandu mama Film Reviews Hindhi Film 2

இப்படியாக வெறும் மொக்கை படங்களுக்கே விமர்சனம் எழுதி அவஸ்தை அட்டுக்கொண்டு இருந்தவருக்கு ஒரு மாறுதலுக்காக கூட மகாமொக்கை படங்களே அமைந்தன. விரக்தியின் உச்சகட்டத்திற்கு சென்ற நிலையில் அவர் விமர்சனத்தின் அளவை குறைத்து விடுவார். ஒரு முழு பக்கத்திற்கு வரும் பட விமர்சனங்கள் இப்படியாக கால் பக்கம் கூட வராமல் இருக்கும். அதற்க்கு ஒரு சிறந்த உதாரணம் இந்த ஹவஸ் பட விமர்சனம்.

மற்றுமொரு மொக்கை ஹிந்திப்பட விமர்சனம் - வாண்டுமாமாவின் கிரிடிகல் லுக்

Kalki Magazine Vandu mama Film Reviews Hindhi Film 1

கல்கி இதழின் மற்றுமொரு சிறப்பு அம்சம் நாடக விமர்சனங்கள். அந்த காலத்தில் ஒவ்வொரு இதழிலும் ஒரு நாடக விமர்சனம் இடம்பெற்றுக்கொண்டு இருந்தது. சில வேளைகளில் அந்த விமர்சனத்தையும் கௌசிகன் அவர்கள் விட்டு வைக்கவில்லை. இதோ ஒரு ருசிய இராமாயண நாடக விமர்சனம் - வாண்டுமாமாவின் பார்வையில்:

போங்கப்பா, படம் எல்லாமே போர், அதனால ஒரு நாடக விமர்சனம் - ருசிய ராமாயணம் - நாடக விமர்சகர்

Kalki Magazine Vandu mama Stage Play Reviews Russian Ramayana

இவை அத்துனையையும் மீறி பல பல்சுவை துணுக்குகள் இடம்பெற்று இருந்த இதழே கல்கி. இதோ ஒரு சுவையான வரலாற்று சம்பவம் கௌசிகன் அவர்கள் கைவண்ணத்தில்.

வியக்க வைக்கும் சரித்திர சம்பவங்கள்- வாண்டுமாமாவின் வியக்க வைக்கும் எழுத்தாற்றல்
Kalki Magazine vandu Mama Historical Facts

நேரமின்மை காரணமாக பல பதிவுகளை இட நினைத்தும் இட இயலவில்லை. மன்னிக்கவும். அதற்காக இந்த சரித்திர சிறப்பு வாய்ந்த நாளில் பதிவிடாமல் இருக்கவும் மனமில்லை. அதற்காகவே இந்த பதிவு. விரைவில் சந்திப்போம். நன்றி, வணக்கம்.

Thursday, December 9, 2010

பொக்கிஷப் புதையல் 1

அன்பு கலந்த காமிக்ஸ் நெஞ்சங்களுக்கு காமிக்ஸ் காதலனின் வணக்கங்கள்.

இன்றுமுதல் ஒவ்வொரு வாரமும் காமிக்ஸ் காதலனின் பொக்கிஷப் புதையல் என்ற கதம்பம் வெளிவரும். இதில் நகைச்சுவை, காமிக்ஸ் ஸ்டிரிப், சினிமா விளம்பரங்கள், சினிமா விமர்சனங்கள், சிரிக்க சிறந்த ஜோக்குகள், சிறப்பான பல்சுவை தோரணங்கள் என்று பலவகையான கதம்பமாக இருக்கும். இதனைப்போலவே ஒவ்வொரு வாரமும் தொடரலாமா என்பதை நீங்கள் சொல்லுங்கள். நான் தொடருகிறேன்.

கல்கி 1967: இந்த கதம்பம் பகுதியில் கல்கி இதழின் 1967ம் ஆண்டு வெளிவந்த புத்தகங்களில் இருந்து சில பல பொக்கிஷங்களை கண்டு ரசிக்கலாம். இதனைப்போலவே ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ஆண்டு சிறப்பு பகுதிகளை எழுதல்லாம் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்துக்களை தெரிய படுத்துங்கள்.

சுதர்சனம் கார்னர்: ஓவியர் மற்றும் நகைச்சுவை எழுத்தாளர் சுதர்சனம் அவர்களை மக்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன். அவரின் ஜோக்குகள் கல்கி இதழில் வெளிவந்து நம் மனதை கொள்ளை கொண்டன. அவற்றை இனிமேல் ஒவ்வொரு வாரமும் கதம்பம் பகுதியில் வழங்கலாம் என்றிருக்கிறேன். முதல் பகுதி இதோ:

 

1967 SJ 1 1967 SJ 2 1967 SJ 3

காமிக் ஸ்டிரிப் கார்னர்:

கல்கி இதழ்களில் அந்த நாட்களில் (குமுதம் போல) பல காமிக் ஸ்ட்ரிப்புகள் தொடர்ச்சியாக வெளிவந்துக்கொண்டிருந்தன. அவற்றிற்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் தனியாக இருந்தது. சிறப்பான பல ஸ்ட்ரிப்புகள் வந்த காலம் அது. இதோ எனக்கு பிடித்த ஒரு ஸ்ட்ரிப்: மந்திரிகள் உலகம்.

அரசியல் கருத்துக்களை எடுத்து சொல்வதில் கல்கி இதழுக்கு நிகரே கிடையாது. குமுதமும், ஆனந்த விகடனும் சற்றே மழுப்பி எழுதுபவை. ஆனால் கல்கி அப்படி அல்ல. ஆனந்த விகடனில் கல்கி அவர்கள் இருந்த காலத்திலேயே அவரின் கருத்துக்கள் பிரபலம். ஆகையால் அவரின் சொந்த இதழில் சொல்லவே வேண்டாம்.

1967 MU 1 1967 MU 2

1967 MU 3

சினிமா விமர்சன கார்னர்:

கல்கி பத்திரிக்கையானது சினிமா விமர்சனதிர்க்கென்றே புகழ் பெற்ற பதிரிக்கையாகும். இந்த பத்திரிக்கையில் தான் தமிழ் படங்கள் மற்றும் ஹிந்தி படங்கள் (ஒவ்வொரு வாரமும்), ஆங்கில படங்கள், கன்னட படங்கள், நாடகங்கள் என்று பல விதமான விமர்சனங்கள் வந்துக்கொண்டே இருந்தன. அதிலும் குறிப்பாக காந்தன் அவர்கள் தமிழ் மற்றும் ஹிந்தி படங்களுக்கு விமர்சனம் எழுதுவார். ஆங்கிலப்படங்களுக்கு பெரும்பாலும் ரா.வி எழுதுவார் (சிற்சில சமயங்களில் வாண்டுமாமா அவர்களும் எழுதுவது உண்டு). இப்படியாக கல்கி சினிமா விமர்சனம் படிப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருந்த காலம் அது.

பல்ஜ் போர்: ஆங்கில படங்கள் சரமாரியாக வெளிவந்துக்கொண்டு இருந்த காலகட்டம் அது. சென்னையில் இருந்த அண்ணா சாலையில் இருந்த நான்கு பிரபல திரையரங்குகளிலும் ஆங்கில படங்கள் ஓடிக்கொண்டு இருக்கும். மக்களும் தங்களுடைய ஆதரவை ஆங்கிலப்படங்களுக்கு தந்துகொண்டிருந்த காலம் அது. அதிலும் ஜேம்ஸ் பான்ட் படங்கள் உலக அளவில் வெளிவந்து ஓரிரு ஆண்டுகள் கழித்தே இந்தியாவிற்கு வந்து கொண்டிருந்த காலம் அது. இந்த சூழலில் பல விதமான ஆங்கிலப்படங்கள் வந்து ஓடிக்கொண்டிருந்தன.

1967 FR 1

பட்டணத்தில் பூதம்: வழக்கமாக பெயரில்லாமல் விமர்சனம் இருந்தால் அது வழக்க்கமாக விமசனம் செய்யும் நபர் இல்லாமல் வேறொருவர் செய்த விமர்சனம் என்று பொருள். அநேகமாக இந்த விமர்சனம் வாண்டுமாமா அவர்கள் எழுதியதாக கூட இருக்கலாம். யார் கண்டது? சமூக அவலங்களை சாடிய விதத்தில் இருந்தே இது வாண்டுமாமா அவர்களின் கைவண்ணம் என்பது தெள்ளத்தெளிவாக விளங்குகிறது. 

1967 FR 2

டாக்டர் ஷிவாகோ:

டாக்டர் ஷிவாகோ படம் இரண்டு ஆண்டுகளாக தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என்று மக்கள் காத்திருந்தனர். உலக அளவில் இந்த படம் சிறந்த திரைப்படம் என்று பெயரெடுத்திருந்த நேரமது. ஆனால் தியேட்டரில் படம் வரவில்லை. அந்த காலத்தில் டிவிடி, இன்டர்நெட் இல்லாமல் மக்கள் பத்திரிக்கைகளையே நம்பி இருந்தனர். ஆகையால் கல்கியில் வந்த விமர்சனம் சிறப்பாக பேசப்பட்டது. படம் வந்த சில நாட்களில் (பெரும்பாலும் அதே நாளில்) இப்போதெல்லாம் படங்களை சென்னையில் பார்க்கும் நாம், அந்த காலத்தில் இருந்திருந்தால்? யோசிக்கவே கஷ்டமாக உள்ளது. டாக்டர் ஷிவாகோ படம் உலக அளவில் வந்துசரியாக இரண்டு ஆண்டுகள் கழித்து சென்னையில் இந்த படம் வெளியானது.

1967 FR 3

சாமா ஜோக்குகள்:

சுதர்சனம் அவர்களின் ஜோக்குகளை போலவே (சொல்லப்போனால் அவரைவிட) புகழ் பெற்றவை சாமா அவர்களின் ஜோக்குகள். அந்தக் காலத்தில் ஜோக்குகளுக்கு படம் வரைபவரே நகைச்சுவை துணுக்குகளையும் எழுதினர் என்றால் அது சாதாரண விஷயமே. சாமா அவர்களின் ஜோக்குகளையும் கூட கல்கி சிறிது கவனிக்கலாம். ஆனந்தவிகடன் தனது பழைய ஓவியர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் கொடுக்கும் மரியாதையை கல்கியும் கொடுக்கலாம். தனியாக இவர்களின் ஜோக்கு புத்தகங்களை வெளியிடலாம். கல்கி கவனிக்குமா?

இந்த ஜோக்கில் முதல் படத்தில் இருக்கும் அந்த போட்டோ பிடிப்பவரை சற்று உற்று நோக்குங்கள். நம்ம நடிகர் சோ ராமசாமி போல இல்லை?

SAJ 1 SAJ 2 SAJ 3

விளம்பர கார்னர்:

விளம்பரம் என்றால் பொருட்களுக்கான விளம்பரங்கள் அல்ல. அடுத்து வரப்போகும் தொடர்கள், சிறப்பிதழ்கள், போட்டிகள் போன்றவற்றிற்கான விளம்பரங்கள். கல்கி வரப்போகும் தொடர்களை விளம்பரம் செய்வதில் வல்லவர்கள். குறிப்பாக ஒரு தொடர்கதை வரப்ப்போகிறது என்றால் மூன்று நான்கி புத்தகங்களில் இருந்தே விளம்பரம் செய்வார்கள். அதுவும் இப்போது இருக்கும் இந்த அர்ஜுன் அம்மா யாரு போன்ற டீசர் விளம்பரங்கள் கல்கியில் தான் ஆரம்பித்தன என்றால் அது மிகையாகாது. இதோ ஆம் ஆண்டு வந்த சில விளம்பரங்கள்:

1967 AD 1 1967 AD 2

1967 AD 3

வாசகர்களுக்கான புதிர் கார்னர்:

வாசகர்களுக்கென்றே பலவிதமான புதிர்களும், போட்டிகளும் கல்கியில் சிறந்து விளங்கியது. குறிப்பாக போட்டோ போட்டிகள், வாழ்க்கை குறிப்பு போட்டிகள், பிரபலங்களின் சிறு வயது நினைவு குறிப்பு போட்டிகள் என்று கல்கியே போட்டிகளால் கலை கட்டிய சமயம் அது. அந்த சமயத்தில் வந்த ஒரு பகுதியே யார் தெரியுமா? என்ற போட்டோ போட்டி பகுதி. இந்த பகுதியில் ஒரு போட்டோ இருக்கும். அந்த போட்டோவில் ஒரு பிரபலத்தின் சிறு வயது போட்டோ இருக்கும், அதை வைத்து வாசகர்கள் அந்த பிரபலத்தை கண்டறிய வேண்டும். இந்த போட்டியையே நான் நமது வாசகர்களுக்கும் அளிக்கிறேன்: இந்த யார் தெரியுமா புக்தியில் இருக்கும் மூன்று பிரபலங்கள் யார்? அடுத்து வெள்ளிகிழமை அன்று நான் பதில் அளிக்கும் முன்பே பதிலை சொல்பவர்களுக்கு சிறப்பு பரிசு உண்டு.

YT 1A YT 2A YT 3A

ஒரே ஒரு க்ளூ: இந்த மூவரில் ஒருவர் நம்ம அல்டிமேட் ஸ்டார் அஜித் உடன் சம்பந்தப்பட்டவர்.

அடுத்த வெள்ளியன்று இந்த புதிர்களுக்கு விடைகளுடன், மற்றும் பிற பொக்கிஷ புதையல்களுடன் உங்களை சந்திக்கிறேன்.

Wednesday, June 9, 2010

கவுன்சிலர் கனகசபை – குமுதம் 1969: ஜெ…வின் காமிக் ஸ்ட்ரிப்புகள்

அன்பு கலந்த காமிக்ஸ் நெஞ்சங்களுக்கு காமிக்ஸ் காதலனின் வணக்கங்கள். இன்று நம்முடைய வலையுலக நண்பர் டாக்டர் விஜய், ச்சே, மன்னிக்கவும், டாக்டர் செவன் அவர்களுக்கு பிறந்த நாளாம், வாழ்த்துக்களை கூறுவதோடில்லாமல் என்னுடைய சார்பில் ஒரு சிறிய பதிவினை இட்டு அட்டெண்டன்ஸ் போட்டுக் கொள்கிறேன்.

இந்த ஸ்ட்ரிப்பில் முதல் ஜோக் டாக்டரைப்பற்றி இருப்பதால் இதனை முதலில் இட்டு இருக்கிறேன்.

A

அடுத்தபடியாக வரும் ஜோக்கை கூர்ந்து படியுங்கள். அந்த நாட்களில் இருந்த சொல் விளையாட்டும், சிலேடையும் இப்போது காணாமல் போய் விட்டது கடினமாக உள்ளது. B

அடுத்தபடியாக 1969ம் ஆண்டு குமுதத்தில் வந்த கவுன்சிலர் கனகசபை என்ற வாரந்திர ஸ்ட்ரிப்பின் மூன்று பகுதிகளை ரசிக்க போகிறோம்:

Part1:

1

Part 2:

2

Part 3:

3

விரைவில் (next week?!?) அமரர் தமிழ்வாணனின் ஒரு படைப்போடு உங்களை சந்திக்கிறேன்.

Saturday, May 1, 2010

போலி சாமியார்

அன்பு கலந்த காமிக்ஸ் நெஞ்சங்களுக்கு காமிக்ஸ் காதலனின் வணக்கங்கள். இன்று மே தினம். வழமையாக சிறப்பு தினங்களில் பதிவிடும் நமது காமிக்ஸ் ரசிகர்கள் இன்று ஏனோ வரவில்லை. அதனால் ஏதோ என்னால் முடிந்த அளவிற்கு ஒரு சிறிய பதிவுடன் ஆஜராகி உள்ளேன்.

தற்போதுள்ள சூழலில் நம்மால் முன்மாதிரி பதிவிட இயலவில்லை.மாதம் ஒரு பதிவிட முக்கிக்கொண்டு இருக்கையில் எங்கள் அண்ணா, எங்கள் ஆசான், பெரியண்ணா திரு கனவுகளின் காதலர் அவர்கள் கடந்த மாதம் மட்டும் பதினோரு முத்து முத்தான பதிவுகளை இட்டு நம்மையெல்லாம் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி உள்ளார். அவருக்கு ஒரு சல்யூட். அவருடைய ஏப்ரல் பதிவுகளை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

சமீப நிகழ்வுகளில் நம்முடைய கவனத்தினை பெரிதும் கொள்ளையடித்த சாமியாரை பற்றி இன்னமும் ஒலக காமிக்ஸ் ரசிகர் பதிவிடாமல் இருப்பதன் மர்மம் எனக்கு இன்னமும் விளங்கவில்லை. அதனால் நான் பிள்ளையார் சுழி போட்டு சாமியார்களை பற்றிய சிறு பதிவினை ஆரம்பிக்கிறேன். மற்றவர்கள் தொடர்ந்தால் மகிழ்வு. சுவாமி குத்தானந்தா என்ன செய்வாரோ என்றும் பயமாக உள்ளது.

சிறுவயதில் நான் பூந்தளிர் இதழில் படித்த ஒரு சாமியார் கதையை உங்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன். படித்து மகிழுங்கள்.

1st page
2nd Page

அடுத்த ஞாயிறு முதல் வழமையான பதிவுகளை எதிர்பாருங்கள்.

Wednesday, April 14, 2010

அரசியல் சூப்பர் கிங்ஸ்

அன்பு கலந்த காமிக்ஸ் நெஞ்சங்களுக்கு காமிக்ஸ் காதலனின் வணக்கங்கள். இன்று காமிக்ஸ் உலகில் வாராது வந்த மாமணிகள் அனைவரும் ஐந்து, ஆறு மாதங்கள் கழித்து பதிவிடுவதை பார்த்து, நானும் ஒரு பதிவிடலாம் என்று வந்துள்ளேன். இந்த பதிவும் ஒரு "மன்னர்கள்/ராஜாக்கள்" சம்பந்தப்பட்ட பதிவுதான். ஆம், தலைப்பில் உள்ளது போல அரசியல் சூப்பர் கிங்ஸ் தான் இந்த பதிவின் சாராம்சம்.

தற்போது IPL மோகம் தலைவிரித்தாடுகிறது. எங்கே சென்றாலும் யாராவது அதனைப் பற்றியே பேசுகின்றனர். அதனால் நமது அரசியல் உலகில் நிகழும் நிகழ்வுகளை இந்த IPL போட்டி அணிகளுடன் சம்பந்தப்படுத்தி யோசிப்பதில் வியப்பேதுமில்லை. சமீபத்தில் நான் படித்து ரசித்த இரண்டு கட்டுரைகளின் பக்கங்களை உங்களுக்காக இங்கே வழங்குகிறேன். படித்து மகிழுங்கள். இரண்டுமே கிரிக்கெட் மற்றும் அரசியலை தொடர்புபடுதுபவை.

முதலில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வந்த குமுதம் இதழில் இருந்து "கவுண்டமணி - செந்தில்" காமெடிக்கு புகழ் பெற்ற வாழு பிரசாத் அவர்களின் கற்பனையில் வந்த கட்டுரை:

CSK 1
CSK 2

பிறகு, நான் மிகவும் ரசிக்கும் சட்டைர் எழுத்தாளர் சத்யாவின் கைவண்ணத்தில் சென்றவார துக்ளக் இதழில் வந்த இருபக்க கட்டுரை:

CSK 3
CSK 4

தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்த தினம் மற்றும் சித்திரை முதல் நாள் நல்வாழ்த்துக்கள். நண்பர் விஸ்வாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

Sunday, March 14, 2010

சினிமா விமர்சகர் வாண்டுமாமா

அன்பு கலந்த காமிக்ஸ் நெஞ்சங்களுக்கு காமிக்ஸ் காதலனின் வணக்கங்கள். பல மாதங்களாக பதிவிடாமைக்கு மன்னிக்கவும். பணிச்சுமையும், மன உளைச்சலும் தான் பதிவிடாமைக்கு காரணங்கள். இனிமேல் குறைந்த பட்சம் ஓரிரு மினி அல்லது மைக்ரோ பதிவுகளாவது இட முயல்கிறேன்.

அமரர் தமிழ்வாணனின் ஒரு பதிவினை இட பல நாட்களாக தயார் செய்து வைத்து இருந்தும், இட இயலவில்லை. கடந்த ஒரு வாரமாக தமிழ் காமிக்ஸ் பதிவுலகில் ஒரே வாண்டுமாம ஸ்பெஷல் தான். பதிவுலகின் இரண்டு ஹெவி வெயிட் பதிவர்களும் போட்டி போட்டுக் கொண்டு பதிவுகளின் மூலம் நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்கள். அதனை எந்த ஒரு காமிக்ஸ் பதிவர்களும் மிஸ்  செய்து இருக்க வாய்ப்பே இல்லை. இருந்தாலும் கூட அந்த பதிவின் சுட்டிகள்:

தமிழ் காமிக்ஸ் உலகம் (ஆங்கிலம்) கிங் விஸ்வா - வாண்டுமாமா

அகோதீக (தமிழ்) டாக்டர் செவன் - வாண்டுமாமா 

வாண்டுமாமா பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள அந்த இரண்டு பதிவுகளே போதுமானது. வாண்டுமாமா அவர்கள் கல்கி நிறுவனத்தில் பணி புரிந்தபோது அவர் அடிக்கடி சினிமா விமர்சனங்களும் எழுதுவார். இதனை பற்றி ஏற்கனவே டாக்டர் செவன் அவர்கள் ஒரு முழு பதிவினை இட்டுள்ளார். அந்த பதிவினை படிக்க இங்கே செல்லவும்.

அந்த வகையில் பார்த்தால் வாண்டுமாமா அவர்கள் ஒரு பலதுறை வித்தகர். எனுடைய நண்பர் ஒருவர் கூறுவார், "வாண்டுமாமா மட்டும் குழந்தைகளுக்கு எழுதாமல் பெரியவர்களுக்கு என்று எழுத ஆரம்பித்து இருந்தால், இன்னுமொரு சுஜாதாவை நம் தமிழுலகம் கண்டு இருக்கும்". ஒரு விஷயம் பற்றி கூறியே ஆக வேண்டும்: சினிமா விமர்சனங்கள் எழுதும்போது கூட அவரின் அந்த "நியாய-தர்மங்கள்" வெளிப்பாடு சிந்தனை அவரின் எழுத்துக்களில் வெளிப்படும். அவரை பொறுத்த வரையில் அனைத்துமே சீரிய முறையில் இருக்க வேண்டும். அதனால் அனைத்தையுமே அவர் மிகச் சிறந்ததாக மட்டுமே அவர் எதிர்பார்ப்பார். இந்த ஒரு விமர்சனத்தை படித்து பாருங்கள், உங்களுக்கே புரியும்:

kalki cinema review by kausikan

மற்றுமொரு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், சினிமா விமர்சனங்கள் கௌசிகன் என்ற பெயரிலேயே இருக்கும். வாண்டுமாமா என்ற பெயரை அவர் சிறுவர் இலக்கியத்துக்கு அர்பணித்து விட்டார்.

விரைவில் (next week?!?) அமரர் தமிழ்வாணனின் ஒரு படைப்போடு உங்களை சந்திக்கிறேன்.

Saturday, December 5, 2009

ஜூனியர் மரண அடி மல்லப்பா

அன்பு கலந்த காமிக்ஸ் நெஞ்சங்களுக்கு காமிக்ஸ் காதலனின் வணக்கங்கள்.
கடந்த பதிவான இயந்திரசாமியை உங்களில் பலருக்கு பிடித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே. தொடர்ந்து இது போன்ற சிறப்பான பதிவுகளை வழங்க முயல்கிறேன். இந்த பதிவை இடுவதற்கு ஏற்பட்ட கால தாமதத்திற்கு மன்னிக்கவும். இனிமேல் எந்த விதமான தாமதமும் இராது என்பது உறுதி. இனிமேல் இந்த பதிவிற்கு செல்வோம்.
 
முன்பு ஒரு முறை மரண அடி மல்லப்பாவை சந்தித்து இருந்தீர்களே, நினைவிருக்கிறதா? இதோ, அவரின் ஜூனியரை சந்தியுங்கள்.

Junior MAM 1A

Junior MAM 1B

அனைவரும் ரசிக்கும் வகையில் இருப்பதே இந்த காமிக்ஸ் ஸ்டிரிப்பின் சிறப்பு அம்சம் ஆகும். என்ன ஒத்துக் கொள்கிறீர்களா?
Junior MAM 2A

Junior MAM 2B

இந்த பதிவு ஒரு சிறப்பு பதிவு என்பதால், இதோ, கோல்டன் ஒல்டீஸ் ஆக ராணி வார இதழின் சில சிறப்பு சிரிப்புகள்:

Rani 1967 comic strip By jothi  

இந்த பதிவை நான் இடுவதற்கு ஒரு காரணமும் உள்ளது. சமீபத்தில் என்னுடைய நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்று இருந்தபோது, அவரின் சிறு பெண் குழந்தை வார நாட்களை கூறச்சொன்னால், சண்டே,மன்டே என்று சொல்ல ஆரம்பித்தது. தமிழில் சொல்ல தெரியவில்லையாம். அப்போது நான் ஒரு கதையை சொல்லி வார நாட்களை நினைவு படுத்தினேன்.

ஞாயிற்றுகிழமை நகை காணோம்

திங்கட்கிழமை திருடன் பிடிபட்டான்

செவ்வாய்க்கிழமை ஜெயிலுக்கு போனான்

புதன்கிழமை புத்தி வந்தது

வியாழக்கிழமை விடுதலை ஆனான்

வெள்ளிக்கிழமை வீடு திரும்பினான்,

சனிக்கிழமை சாப்பிட்டு படுத்தான்.

Rani 1967 comic strip By jothi 2

மற்றுமொரு சிறப்பு சிரிப்பு:

Rani 1967 comic strip By jothi 3

விரைவில் அமரர் தமிழ்வாணனின் ஒரு படைப்போடு உங்களை சந்திக்கிறேன்.

Friday, October 16, 2009

இயந்திர சாமி


அன்பு கலந்த காமிக்ஸ் நெஞ்சங்களுக்கு காமிக்ஸ் காதலனின் வணக்கங்கள். கடந்த பதிவான குரங்கு குசலவை உங்களில் பலருக்கு பிடித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே.

இந்த பதிவை இடுவதற்கு ஏற்பட்ட கால தாமதத்திற்கு மன்னிக்கவும். இனிமேல் எந்த விதமான தாமதமும் இராது என்பது உறுதி. இனிமேல் இந்த பதிவிற்கு செல்வோம். அதற்க்கு முன்பு அனைவருக்கும் என்னுடைய தீப ஒளி நல்வாழ்த்துக்கள். மங்களம் உண்டாகட்டும்.

நம்முடைய இந்த தீபாவளி ஸ்பெஷல் பதிவில் நாம் ஆராயப்போகும் ஸ்டிரிப் இயந்திர சாமி ஆகும். இது சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு கணிப்பொறி எல்லாம் வரும் முன்பு ஆரம்பிக்கப் பட்ட ஒரு ஸ்டிரிப் ஆகும். இந்த வருடக்கணக்கை மறவாதீர்கள். ஏனெனில் இந்த ஸ்டிரிப் இன்றளவும் பலரால் நினைக்கப் படுவதற்கு காரணம் இந்த ஸ்டிரிப்பின் காலம் கடந்த கருத்துக்களும் சமூக முன்னோட்ட சிந்தனையும் தான். இந்த இயந்திரசாமி ஸ்டிரிப் தினமணிக்கதிர் இதழில் ஓவியர் ஜெயராஜ் அவர்களின் கை வண்ணத்தில் வந்து பலரை மகிழ்வித்தது. பல சமயம் இந்த ஸ்டிரிப்பில் வந்த கருத்துக்கள் ஆசிரியர் மற்றும் ஜெயராஜ் அவர்களின் கருத்துக்கள் ஆகும். மேலும் சில சமயங்களில் பிரபல அரசியல் விமர்சகர் சோ அவர்களின் கருத்துக்களும் வந்து கலக்கும். இதோ ஒரு சாம்பிள்:

I S 26  Dinamani kathir 1979

என்னடா இதெல்லாம் ஒரு ஸ்டிரிப்பா? என்று கேட்காதீர்கள். முப்பது வருடங்களுக்கு முன்பு ரோபோ பற்றி எல்லாம் ஒரு தேர்ந்த ஞானம் இல்லாத கால கட்டத்தில் வந்த இந்த ஸ்ட்ரிப் இது. மேலும் இது ஒரு பேண்டசி தானே? அதனால் ஒரு ரோபோ நம்முடைய நிஜ உலகில் வந்தால் என்ன நடக்கும் என்ற சிந்தனையின் பேரில் வந்த இந்த ஸ்டிரிப்'ஐ ரசியுங்கள். அரசிய கருத்துக்களுக்கும் பஞ்சமில்லை. இதோ காங்கிரஸ் கூட்டணியை தாக்கும் சோ அவர்களின் கருத்துக்கு வந்த ஸ்டிரிப்.

I S 15 Dinamani kathir 1979

நம்முடைய தினசரி வாழ்வில் நடக்கும் சம்பவங்களில் இயந்திரங்களும் கலந்து கொண்டால் அல்லது இந்த சம்பவங்களில் அவர்கள் பங்கு கொண்டால் என்ன நடக்கும் என்பதே இந்த ஸ்டிரிப் ஆரம்பித்ததின் நோக்கம். நாம் எல்லோரும் ஏதேனும் திருவிழா சென்றால் நடக்கும் சம்பாஷணையை இரண்டு ரோபோக்கள் நடத்திக் காட்டுகின்றன. பாருங்கள்.

I S 22  Dinamani kathir 1979

சரி, சரி. இந்த பதிவு நேரமின்மை காரணமாக ஒரு சிறிய பதிவே. அதனால் அதனை ஈடுகட்ட இதோ சில ஜோக்குகள்.

1979 dinamani kathir 1

என்னடா இந்த ஓவியரின் கை வண்ணத்தை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா? இவர் வேறு யாரும் அல்ல. நம்முடைய பிரபல ஓவியர் செல்லம் தான்.

சமீபத்தில் நம்மை விட்டு சிவலோக பிராப்தி அடைந்த பிரபல ஓவியர் சுதர்சன் அவர்களின் கைவரிசையை அடுத்த மூன்று ஜோக்குகளில் பாருங்கள்.

1

இந்த ஜோக்குகள் எல்லாம் எழுபதுகளில் கல்கி இதழில் வந்தவை என்பதை சொல்ல மறந்து விட்டேன்.

2

தினசரி வாழ்வில் நடக்கும் சம்பவங்களில் உள்ள நகைச்சுவை அம்சங்களை வெளிக் கோணரவதே இவரின் வேலை. அதுவும் இவருக்கு யாரும் ஸ்கிரிப்ட் எழுதுவது இல்லை. ஆம், இவர் ஒரு கிரியேட்டர் ஆவார். இவரின் ஜோக்குகளுக்கு இவரே ஸ்கிரிப்ட் அமைத்துக் கொள்வார்.

3

அனைவருக்கும் மறுபடியும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.